Friday 31 May 2013

பருவ மாற்றம் ...


மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென அலையும்
உனது பார்வையில்

பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக
ஒப்பனைகளோடு காத்திருக்க

உன்
அண்மை
என்னை எரித்தாலும்

மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின் பசுந்தளிர்களாய் .

No comments: