Thursday 30 May 2013

சுழல் விதி . . .


எத்தனை முறை தான்
இந்தக் குளிர் நிலவில் நனைவது
மேலும்
நிலவு
ஏன் என்னைத் துன்புறுத்துகிறது

நான்
குளிர்ந்திருக்கையில்
அவன்
தகித்துக் கொண்டிருக்கிறான்

எதிர் எதிர் திசையில்
பயணித்தும்
எவ்வாறு
ஒருவரை ஒருவர் ஆட்கொள்கிறோம்

சித்திர எழுத்துக்களின் புதிர்களைச் சுமந்து
சுழன்று கொண்டிருக்கும்
இந்த பூமி
விதிகளால் ஆனது

எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத மனம்
அவனில் நெகிழ்ந்து
பித்தேறிக் கிடக்கிறது

அலர் பேசித் திரிய
இடமளித்துச்
சுழல்கிறது
இந்த நிலவு

நன்றி . உயிர் எழுத்து - December .

No comments: