Thursday 30 May 2013

சுழற்சி . . .

பச்சைப் புல்வெளியின் மேல்
மிதக்கின்ற நீலவானத்தில் பறந்து செல்கிறது
பஞ்சுப் பொதிகள்

பஞ்சுப் பொதிகளில் இருந்து கசிகின்றன
அன்பின் துளிகள்

பச்சைவெளியின் ரகசியங்களை
சுமந்து செல்கின்ற பொதிகள்
நிலத்தின் வழியாக
கடலைச் சேர்கின்றன

பறவைகள்
பறக்கின்ற வானம்
நிலத்தில் அடங்குகிறது .

No comments: