Thursday 30 May 2013

ரிஷிமூலம் . . .



தண்ணீர்
தன் வடிவத்தினை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
நதியின்
பிரவாகமாய்
கடலின்
அலைகளாய்
வானின்
மேகங்களாய்
புல்லின்
பனித்துளியாய் உருமாறும்
தண்ணீர்
மிகத் தூய்மையானது
மேலும்
வண்ணமும்
வடிவமுமற்ற அது
எப்படியும் தேவையாயிருக்கிறது

பிறந்த குழந்தை பருகும் முதல் துளி நீரில்
துவங்குகிறது அதன் தேடல் .

No comments: