Friday 31 May 2013

அப்பொழுது பனிக்காலம். . .



அப்பொழுது பனிக்காலம்
அந்தப் பொழுதில்
அந்தக் கணத்தில்
அவனது தேவை எதுவாக
இருக்குமென அறிய முயற்சிக்கிறேன்

ஒரு மிடறு தண்ணீர்
ஒரு கோப்பை கருப்புக்காப்பி
அல்லது
ஒரு முத்தம்
இவ்வாறு ஏதோ ஒன்று

அவனை
அறிந்து கொள்ளும் ஆவலை
வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறேன்
பின்னும்
வெறுமையால் நகரும் சில கணங்கள்
பனிக்காற்றினால் போர்த்தப்பட்டிருக்க
சாத்தியிருக்கும் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே
விளக்குகள் மின்னி மறைகின்றன

ஏதேனும் ஒன்றை கொடுத்திருக்கலாம்
எனத் தோன்றச் செய்கின்ற
அக்கணத்தை

வேறொரு கணமாக சந்திப்பது
எவ்வாறு என்பதையறியாமல் இருக்கிறேன்
இந்த வசந்த காலத்திலும்.

No comments: