Thursday 30 May 2013


இடைவெளி. . .

துரங்களைக் கடக்கவியலவில்லை
விடைபெற்றுக்கொண்ட
தருணம்
உன்னிடமிருந்த எனக்கான சொற்கள் முழுதும்
இல்லாமல் போயிருந்தது
பகல் பிரயாணத்தாலும் உனது மௌனத்தாலும்
களைப்படைந்திருக்கிறேன்
வாகனத்தை
முந்திச் செல்லும் வாகனங்களால்
விடுபடுகிறேன் உன் நினைவிலிருந்து
தார்ச்சாலையில்
எனது வாகனம் செல்கிறது
முற்றுப்பெறாத பயணத்தை நோக்கி
இனிவரும் மாலைப்பொழுது
இனிவரும் இரவு
இனிவரும் நட்சத்திரங்கள்
இனிவரும் அலைபேசி வழியான உனது குரல்
ஒருவேளை என்னைக்
களிப்படையச் செய்யலாம்

நட்சத்திரங்கள்
அடிவானத்தில் மறைந்திருக்கின்றன . 

No comments: