Thursday 30 May 2013

தண்ணீர். . .


தண்ணீர்
வேண்டுமெனச் சொன்னார்கள்
பனிரெண்டு மைல் ஓடினேன்
மூன்று குடுவை
நீரை குடித்துக் கொண்டு
தேறவேயில்லை

அலையத் துவங்கினேன்
தண்ணீரைத் தேடி
பனையில் தேடினேன்
ஒரு தேக்கரண்டி தேறியது
தெளிந்த ஓடையில்
ஒரு குடுவைத் தண்ணீர் தேறியது
அப்போதும் போதாமல்
ஆறுகளை நோக்கினேன்
அவை
மழைக்காகக் காத்திருந்தன

மேகம்
கமுக்கமாயிருந்தது
காற்று
கமுக்கமாயிருந்தது
நிலம்
கமுக்கமாயிருந்தது
தண்ணீருக்காய்
உலகம்
காத்துக்கொண்டிருக்க
கடல்
அனைத்தையும்
மூழ்கடித்தது.

No comments: