Friday 31 May 2013

மலர்தல். . .


நிலாவென
நான்
ஒளிர்வதாகக் கூறுகிறாய்
சூரியனாய் இருந்து கொண்டு

என்
நினைவின் அடுக்குகளில்
எத்தனையோ கதைகள்
பொதிந்துள்ளன

நிலா இரவுகள்
அன்று இருந்தது போல்
இல்லை

பால்யம்
கடந்த இந்த இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன இளவரசனாய்

ஏழு குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும் பொழுதிலும்

No comments: