Friday 31 May 2013

மீட்சி. . .


மலை முகட்டிலிருந்து
வழியும்
நீர் வீழ்ச்சியாய்

ப்ரியங்களைப் பொழிகிறாய்

இலக்கின்றிப் பயணிக்கும்
காற்றைப் போல

உன் அன்பு
பள்ளத்தாக்கை அடைகையில்

கால்களும் கைகளும்
செய்வதறியாது திகைக்க

முத்தங்கள்
ஊற்றெடுக்கும் நிலத்தில்

கடலெனப் பெருகிய
காதல்
உன்னை மீட்கிறது .

No comments: