Friday 31 May 2013

காதல் வழி . . .



ஆற்றின் கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்

வெள்ளம் என் மீது
புரண்டோடுகின்றது

தொண்டை வறண்டு
தாகத்தில் தவிக்கின்றேன்

கால்கள்
நீரில் மிதக்கின்றன

ஆற்றின் போக்கை
எதிர்க்க
இயலாமல்
மீனாய் மாறுகின்றேன்

தப்பிக்க இயலாது
இனி
நானும்

என்னிடம் இருந்து
நீரும் .

No comments: