Thursday 30 May 2013

வேங்கை இருந்த நிலம் . . .


வேங்கை மரத்தின்
பாலைத்தொட்டுப் பொட்டிட
கானகத்தின் நடுவே நிற்கிறேன்

என் சிறுவயது நெற்றியினை
அலங்கரித்தது
வேங்கை மாற பொட்டு

என் குமரிப்பருவத்தை
அழகுபடுத்தியது அது

என் மகளுக்குப் பொட்டிட மரம் தேடுகிறேன்
இந்த வனாந்தரத்தில்

மேட்டுநிலத்தின் மையத்திலிருந்தது
என் சிறுவயது வேங்கை மரம்

அந்த நிலத்தில்
கல்கட்டடம் முளைத்து உறைந்து நிற்கிறது
ஏதேதோ மரங்களின் ஊடே

வேங்கை இருந்த நிலம்
துயரமெனக் கிடக்கிறது கானகத்தில் .

No comments: