Thursday 30 May 2013

இருப்பு . . .



என்னிடம் இருந்து
அது
தொலைந்து விட்டது

தேடித் திரிந்தால்
கண்டடையலாம்

அதைப்
பாதுகாத்தும்
பலனில்லையென
மறுபடியும் காணாமல் போகத்
தொடர்கிறது அவஸ்தைகள்

இருப்பதும்
இல்லாமல் இருப்பதும்
ஒன்றெனப் புரிய
மரணத்தை உணர்ந்தோம்

பின்னும்
உயிர்த்திருக்கிறோம்

No comments: