Friday 31 May 2013

செய்திகளற்ற பகல்பொழுது . . .



தபால்காரரின் வருகையொட்டி
கதவும் ஜன்னல்களும்
திறந்து கொள்கிறான்
துயிலா இமைகளைப் போல

தெருவில்
நிழல்தராத பகல்
அவனது துயரத்தைக் கண்டபடி கடந்து செல்கிறது

அவளின் துயரம்
மேலும் பெருகும்விதமாக
இவள் பெயர் தாங்கியிராத
கடிதங்களைச் சுமந்தபடி
அவளைக் கடந்து செல்கிறார் தபால்காரர்

அருகாமை வீடுகளில் ஒலிக்கும்
குரல்கள்
அவளது இருப்பை
உறுதி செய்கின்றன

தனக்கு வராத கடிதங்களைப் பற்றிய
கற்பனைகளுடன்
மீண்டும் ஒரு நாளுக்காய்
காத்திருக்கத் துவங்குகிறாள் .

No comments: