Friday 31 May 2013

அறிதல். . .



நாட்களாயிற்று கவிதை எழுதி
எதைத்தான் எழுதுவது
இந்தக் காதலை விட்டுவிட்டு

நான் இத்தனை காதலாக கனிந்திருக்கையில்
காதலின் வார்த்தைகள்தான்
எத்தனை சுடுகின்றன
என்னைத் தனிமைப் படுத்துகின்றன

காதல் இவ்விதமாக
துயரத்தைத் தந்தவண்ணம் இருக்கிறது

எத்தனை முயன்றும்
காதலிலிருந்து விடுபட இயலாமல் இருக்கிறேன்

வாழ்நாள் முழுமைக்குமான ஒளி
அவனிடமிருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறபோதிலும்
அவனை நெருங்கிவியலா பின்பொரு நாளில்
அவன் சொல்லக் கூடும்
காதலின் கதையை

அப்பொழுது நான் வெறுமனே
நகர்ந்து கொண்டிருப்பேன் அங்கிருந்து.

No comments: