Friday 31 May 2013

பறவையின் விருட்சம். . .


 


     
     
சிறகுகளின் அசைவில் உருவாகும் ஒளியால்
என்னை அழைக்கிறாய்

உனக்கான சிறகசைப்பு அது
என்பது நீ அறிந்ததே

உயிர் கசிந்து
பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம்
விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை
நீ அறிந்து தானிருப்பாயா
இல்லையேல்
நான் ஒரு பறவை என்பதையாவது

என் சிறகுகளின் அசைப்பில் உருவாகும் ஒளியால்
நீ
திரும்பத் திரும்ப அழைக்கிறாய்

பூக்கள்
மரங்கள்
இலைகள்
வான் வெளி எங்கும்
அவ்வொளியை ஒளிரச் செய்கிறேன்

ஒரு பக்க இறகு காதலையும்
மறுபக்க இறகு தூய்மையான நேசத்தையும்
சிறகடித்து விரிக்கிறது

ஒரு பெண்ணை
வானிலிருந்து தரையிறக்குவதுதானே
உனது விருப்பம்
என்றபோதிலும்
உனக்கான
சிறகசைப்பு அதுவென நீயறிவாய்.

No comments: