Thursday 30 May 2013

கடந்து செல்லும் காலம் . . .


இந்தப் பயணம்தான்
எத்தனை எளிதாய் துவங்கிவிட்டது

மலைகள்
குன்றுகள்
நதிகள்
உருப்பெற்று நிலைபெறும் முன்
நிலவெளியில்
காற்றெனத் துவங்கியது

அவளால்
அவனது பொழுதுகள் முழுமையடைந்திருந்தன

வெம்மை
குளிர்மை என
அவளை உணர்ந்திருந்தான்

அப்பொழுதெல்லாம்
ஒருபோதும் முடிந்துவிடாத பயணத்தை
யாவருடனும்
துவங்கிவிட இயலாது என்பதை
அவன் அறிந்திருக்க வில்லை

காற்றைப் பற்றி நடந்த அவன்
கடந்து கொண்டிருக்கிறான்
காலத்தையும்
காதலையும் .

No comments: