Thursday 30 May 2013

நீர்த் தாவரம் . . .



நான் நிலம்
நான் நீர்
என்னால் ஆன ஒரு தாவரத்தை
ஒருமுறை கூட
பார்க்க வாய்க்கவில்லை

அது
என் நிலத்தில் துளிர்த்து கிளை விட்டுள்ளது
நீரால் வளரும்
அதற்கு ஒரு பெயரும் இல்லை
வண்ணமும் இல்லை

நிலத்தில் தாவரங்களின் வலிமை
நீராலானவை
நீரில் தாவரங்களின் நெகிழ்வு
நிலத்தினாலாவை

தாவரங்களால் ஆனது இவ்வுலகு

அந்தத் தாவரங்களாகவே
இருக்க விரும்புகிறேன்

No comments: