Thursday 30 May 2013

என் தனித்த நாட்களின் இரவுகள் . . .


கலக்கமுற்று
கடந்துகொண்டிருக்கிறேன்
என் தனித்த இரவுகளை

காற்று
சூரியனின் அக்கினியை
நிலமெங்கும் பரவச் செய்தபடியிருக்கிறது

ஒரு கணம்
இமைமூடி
மறுகணம் நட்சத்திரங்களை
ஒளிரச் செய்கிறேன் வானத்தில்

இந்த நட்சத்திரங்களை
நிலமெங்கும்
பதித்து வைக்கிறேன்
அவை
என் கண்களில் ஒளிர்கின்றன

நட்சத்திரங்களை
ஒருபோதும் அடைந்துவிட இயலாது
என யார் சொன்னது

ஒரு இமைமூடலில்
சூரியனை
நிலவை
நட்சத்திரங்களை உணர்ந்துவிடலாம்
அவன் அருகிலிருக்கையில்

என் தனித்த நாட்களின் இரவு
கடந்துகொண்டிருக்கிறது
ஒளிர்தல் ஏதும் அற்று .

நன்றி : உயிர் எழுத்து - டிசம்பர் 

No comments: