Thursday 30 May 2013

காளான் பூக்கும் பருவம் . . .



மாலை துயரமாகியது
குளிர்ந்த அவளது கண்களில்
தனிமை
வெம்மையாய் துளிர்க்கிறது
இரவின் இருண்மை
அவள்மீது கவிழ்கிறது

பகலும் இரவும் கூடியிருந்தவன்
நெடுந்தொலைவு சென்றிருந்தான்

தன்னை விட்டுச் சென்றவனின்
வழித்தடம்
காட்டுப்பாதை என்றறிந்திருந்தாள்

நடுஇரவில் மின்னல் ஒளியில்
அந்த வழித்தடம் தோன்றி மறைகிறது
அவளது நினைவுகளில்

காட்டு மரங்களின் ஊடே
காளான்கள் பூத்திருந்தன.

No comments: