Friday 31 May 2013

சுதந்திரம்...



மகிழ்ச்சி எதுவென்று அறியச்செய்தவன் அவன்
அன்பு எதுவென்றும்
காதல் எதுவென்றும்
துயரம் எதுவென்றும்
காமம் எதுவென்றும் உணரச்செய்த
அவனே
சிட்டுக்குருவியின் பறத்தலையும்
கற்றுத் தந்தான்
என் தொடுதலில் சில நட்சத்திரங்கள் பூத்தன
அவன் தொடுதலில் சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்தன
பெண் உடல்
ஆணுக்கானது அல்ல
பெண் உடல்
பெண்ணுக்கானது அல்ல
என்றறிகையில்
அறிந்தேன்

சுதந்திரம் எதுவென.

No comments: