Thursday 30 May 2013

முடிந்த கதைகள் . . .



என் திருமண அழைப்பிதழ்
யார் வீட்டிலோ
எதன் ஊடோ ஒளிந்து கிடக்கும்
நினைவுகளை சுமந்தபடி

இல்லம் வரும்
அழைப்பிதழ்களில் எண்ணற்ற கதைகள் படிந்துள்ளன
ஒரு அழைப்பிதழோடு வருபவர்கள்
தயங்கியபடி வாசலில் நுழைகிறார்கள்
அவர்களிடம் இருந்து கைமாறும் அழைப்பிதழ்
மீட்டெடுக்கிறது
உறைந்துபோன நினைவுகள்

அழைப்பிதழில்
படிந்திருக்கும் மஞ்சள் துகள்களில்
ஒளிர்கின்றன

அந்த நாட்களில்
இரவுகளில்
கண்விழித்து மஞ்சளிட்ட
அம்மாவை
அவள் விரல்களில் கசிந்த
அன்பு படிந்திருந்த அழைப்பிதழை
பத்திரப்படுத்தத் தவறிவிட்டேன்

அதை
ஒவ்வொரு அழைப்பிதழ்களில்
தேடியபடி இருக்கின்றேன்

அந்தக் காலம்
மஞ்சளாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது .

No comments: