Friday 31 May 2013

அதிகாலைச் சூரியன் வருகை…



தூக்கத்தை இழப்பதற்கு
உன் வார்த்தைகள் தேவையில்லை எனக்கு
நீ
என்னை
நினைப்பதைத் தவிர்த்துவிட்டாலே போதும்

மனத்தின் சஞ்சலத்தை
மேலும் அதிகப்படுத்தும்
உன் மௌனம்

என்னுடல்
வெளிறி
ஒளியிழந்து போக
உன் வருகை நிகழாத என் வாசல் போதும்

நம் மகிழ்வான நாட்களில்
சிரிப்பும் குதூகலக் கண்ணீரும்
இன்று
காதலை உருமாற்றியிருக்கிறது

நெடுநாள் உறக்கம் இழந்தபின்பு
துயிலும் மயக்கத்தை
உன் அழைப்பே தரும்

மேலும்
உன் வருகையின் ஒளி
வாடிய குன்றுகளில் கொண்டாட்டத்தை உருவாக்கும் .

No comments: