Thursday 30 May 2013

நீரலை விலகும் பொழுது . . .



பாதங்களை வருடிச் செல்கிறது
மருதா நதி
கூடவே சில மீன்கள்

மேய்ச்சல் முடிந்து திரும்பும் மாடுகள்
நீர் அருந்திச் செல்கின்ற
அந்த மாலையில்

தண்ணீரை அள்ளிப் பருகும்
அவனது கைகள்
அவள் கரம் பற்ற
எதன் பொருட்டோ நழுவிவிட்டது

பின்பொரு மாலையில்
மருதாநதியின் கரையோரம்
இரவு கண்ட கனவை நினைத்தபடி
அமர்ந்திருக்க

கனவை
எப்படி கைக்கொள்ளப் போகிறாள்
என
மாடுகளும்
ஆடுகளும் அசைபோட்டபடி
அவளைக் கடக்கின்றன

நதியின் நீரலைகளில்
அந்தக் கனவு
அவனை நோக்கி நகர்கிறது .

No comments: