Thursday 30 May 2013

எதிர்பார்ப்பு. . .


நான்கு சக்கர வாகனத்தில்
விரைந்து செல்பவர்களைப் பார்த்தபடி இருக்கிறேன்

முன்னும் பின்னுமாகக் கடந்து
முகமுடிகளை அணிந்துகொண்டு செல்பவர்களின்
வாகனங்களின் சப்தத்தைக்
கேட்டபடி
இவர்களெல்லாம் எங்குதான்
போய்கொண்டு இருக்கிறார்கள்
என யோசிக்கிறேன்

ஒரு கணம் எதுவும் அசையாது
நின்று போமெனில்
நான் கடந்துவிடுவேன்

இந்தச் சாலை வழி
இந்த நகரைவிட்டு

இந்த நெரிசலைக் கடந்து
மற்றொரு நகரத்தின் சாலையில்
சிக்கிக்கொள்வதற்காக
என்பதை அறியாதவாறு.

No comments: