Friday 31 May 2013

விதை. . .


கையிலிருக்கும்
சில விதைகளைத் தருகிறேன்
உங்களுடைய நிலத்தின் இடுவதற்காக

இன்று மேலும் இரண்டு மரங்களுக்கு

நீர் ஊற்றியிருக்கிறேன்

யாரோ விதைத்து
வளர்ந்த மரத்தில்
வயதானவர்கள் ஓய்வெடுத்துச் செல்கின்றனர்

காய்த்துக் குலுங்கும் மரத்தினடியில்
சிறுவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றன

என்னிடம் மேலும் சில விதைகள் இருக்கின்றன
என்னிடம் மேலும் சில பறவைகள் இருக்கின்றன
என்னிடம் மேலும் சில ௬டுகள் இருக்கின்றன


முதலில் யார்
இந்த விதையை விதைத்தார்கள் என்று அறிகின்ற
பின்னொரு நாளில்
என்னுடைய கைகளிலிருந்த விதைகளை
வாங்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்

அப்பொழுது
உங்களுடைய நிலத்தில் விதைத்துக்கொண்டிருப்பீர்கள

No comments: