Friday 31 May 2013

மிதக்கும் மேகம்...



உன்னிடம்

பகிர்ந்து கொள்வதெற்கென

மேகத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றேன்



உன் நினைவின் போக்கில்

நகரும் அதைக் கட்டுப் படுத்த இயலாது

இம்முறையும் தவிக்கின்றேன்



நீர்த்துளிகளைச் சுமந்திருக்கும்

இந்த மேகத்திற்கு

கருணையென்பதே இல்லை



என்னை எரித்துக் கொண்டிருக்கும்

உன் மீதான

நினைவை

அணைக்காது நகைக்கின்றது



மின்னலை உதிர்க்கும்

உனது உரசல்களை

எனதுடல் தாங்காதெனினும்



பாலைவனத்தில்

உயிர்த்திருக்க மழை வேண்டித்

தவமிருக்கும் மலர்ச்செடியென



காத்திருக்கின்றது

அத்தருணத்திற்காக.

No comments: