Friday 31 May 2013

நினைவின் பயணம். . .


என் நினைவுகளோடு
இருக்கும்
நீ
என்னுள் கரைகின்றாய்

காத்திருக்கின்றாய்

அருவியின் ஓசையாய்
மனம்
அதிர்வது
புரிகிறது எனக்கு

அது
என் மீதும்
படரத்தான் செய்கிறது

உன் நினைவில்
வெம்மையில்
உருகுவது அறியாமல்

நான்
நதியில்
கரைவதைப் பார்க்கின்றாய்

தூரதேசத்துப் பறவையாய் ஆனாலும்
கடலை
விழுங்கி
உனையடைவேன்

ஒரே
ஒரு சனத்தில்.

No comments: