Thursday 30 May 2013

வெயிலில் உறைதல் . . .

என் பால்யத்திலிருந்து
இத்தனை வெயிலைப் பார்த்ததேயில்லை

வெயில்
என்னை எப்பொழுதும் சுட்டதில்லை

என் கண்கள் எப்போதும்
நிலவெனச் சுடர்ந்து கொண்டிருப்பதாகச்
சொல்பவன் அவன்

எத்தனையோ கோள்கள் இருக்கின்றன

சூரியனை
ஒரு கோள் என்று சொல்லவே மாட்டேன்

ஒருமை
பன்மை ஆகும் அதிசயத்தை
என் கண்களின் வழியே அறியலாம்


சூரியன்
இரண்டு நிலாக்களாக ஒளிர்ந்த விசித்திரம்
வெயில்நாளின் துவக்கத்தில் தான் நிகழ்ந்தது

வெயில்காலம்
இரகசியங்களைக் கொண்டிருக்கிறது

வெயில் காலம் என்பது வேறுவேறாக இருக்கிறது
ஒருபெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும்

சூரியனை
அதுவாகவே எதிர்கொள்ளும் இந்த நாட்களை
எப்படித் தாங்குவேன் .

நன்றி : உயிர் எழுத்து - டிசம்பர்

No comments: