Friday 31 May 2013

நினைவு …



ஒப்பனைகளேதுமின்றி
உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கிற மனத்தில்
நீ
ஒரு மீனென நீந்தி
என்னைக் கலைக்கிறாய்

உன் நினைவு வாதையாக மாறி
நிரம்புகையில்
களைத்த எனதுடல்
நித்திரையில் முழ்கி
கனவுகளைத் தூண்டுகிறது

கனவில்
வடிவங்களற்று
என் மீது படர்கிறாய்

உன்னை
உணர்ந்தபடி
ஏதேதோ சொல்கிறேன்
ரகசியமாய் எவரும் அறியாவண்ணம்

பறவைகள்
நமக்கான
பாடலை இசைக்கத் தொடங்குகின்றன

உனதுடனான எனது இருப்பை
விழுங்கியபடி
மெல்லத் துயில் கலைகிறது

உன்
நினைவை
என்மீது போர்த்தியபடி.

No comments: