Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 3





புரள்கையிலெல்லாம்
இங்கொன்று அங்கொன்றாய் தெறித்து ஒளிர்கிற
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கையில்
அதிகாலையைச் சொல்லும்
வெள்ளிமீன்  முளைக்கக் கண்டாள்
அதன் இளம்மஞ்சள் சிவப்பைக்  கண்களில் பதித்தாள்
பின்கட்டில் லட்சுமி '
இப்போது அழைத்து விடுவாள் என
தளர்ந்த உடையைச்  சரிசெய்தாள்
கட்டவிழ்ந்திருந்த  அவளின் சிறகுகளை
கலைந்த கூந்தலுக்குள் முடிச்சிட்டுக்கொண்டாள்
நீர்க்குடத்துடன்  விரைந்தாள்
தண்ணீரைக் குலுதாளியில்
ஊற்றுகையில்  அவளின் அன்றாடம் துவங்கியது .
%

No comments: