Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 2





இரவுகள் ஒருபோதும் வரையறைக்கு உட்படுவதில்லை
கடலைப்போல முன்சென்று
சிற்றோடைகளை ஏந்திக்கொள்கிறது
முகப்பில் அலைகளால் ஆர்ப்பரிக்கிறதாகவும் 
ஆழ்கடல் ரகசியங்களைக் கொண்டதாகவும் 
இருக்கின்றன
மனதின் கட்டுக்குள் இருப்பதில்லை
என்றபோதிலும்
சுருதி தாழ்ந்த அதன் வாயிலில்
கனவுகளினால்
ஆன்மாவைத்  திறந்து விடுகிறது . 

No comments: