Monday 5 May 2014

இரவு -பிப்ரவரி 19





குழைசெம்மண் வீடுகளும்
முல்லையாற்றுச் செழுமை
வயல்வெளியும்
உயர்ந்த ஆலயமணி அமைந்த தேவாலயமும்
மலைத்தொடர்கள் நிரம்பியவை
அந்த கிராமம்
அங்குதான் அம்மா பிறந்தாள்
அங்குதான் இப்போதும் இருக்கிறாள்

மழைக்காலத்தில் சிவந்து ஓடும் சிற்றோடைகளில் 
குழந்தைக்  கப்பல்களில் களித்திருந்தவள்
இப்போது
உறங்கா இரவுகளின் நீட்சியில்
தனித்திருக்கிறாள்

ஒவ்வொரு கோடைவிடுமுறை
சந்திப்பிலும் தன் முதுமையின் தளர்வினைப்
பிள்ளைகளுக்கு மறைப்பவள் கைகளில்
இம்முறை நீலக் கைபிடியுடன் ஊன்றுகோல்.
%

No comments: