Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 17





அந்த நகரம் அவளுக்குப் பழக்கப் படாதது
இங்கு வந்து ஒரு பகலும்
ஒரு இரவும் முடிந்திருந்தது
மலைகள் நதி என அவளை அறிந்திருந்த கிராமத்தை
மனதில் இருத்தியிருக்கும் அவள்
அதிகாலையில் எழுந்தாள்
இரவின் களைப்புத் தீர
வெந்நீரில் குளித்தாள்
சமையலறையினுள் நுழைந்தாள்
அங்கிருந்து துவங்கியது
அவள் வாழ்வின் அதிகாலை .
%

No comments: