Monday 5 May 2014

மார்ச் - காலை 5




நாமறியாத கணத்தில்
புவியதிரும்
காதலைக் கண்டடையும் விதமாக
இந்த தினம்  இருக்கக் கூடும்

குளத்தில் நீந்துகிற சிறிய வாத்தொன்று
நீர்ப்பரப்பின்மீது எதிர்பாராது எறியப்படுகிற
சிறிய கல்லின் சிதறல்களை
சிலிர்த்து ஏந்துவதுபோல
அறியாத கணத்தின் அற்புதம்
கூடவே பதற்றமும்

என்றாலும் அறிந்திருக்கிறோம்
காதலின் முன் மண்டியிடும்
மனதையே அது ஆட்கொள்ளும்

காதல் அப்படித் தான்
தேர்வு செய்கிறது நம்மை
நாமறியாமல் பூக்கச் செய்கிறது .
%
 Courtesy : Painting-Subrata Das

No comments: