Sunday 4 May 2014

நீர் அருந்தும் நிலம் :






இந்த முழு உலகு அறிந்தவன் அவன்
எண்ணித் தெரிவு செய்பவன்
என்னைத் தேர்ந்தான்

என்னை  
மண் குடுவையாக வனைந்தான்

உலகின் தாகம் தீர்க்கும் நீரை
நான் என்னில் சேமிக்கிறேன்

இந்த உலகின் இயக்க முழுமை உள்ளுணர்ந்து
என்னை என் சுழல்வட்டத்தில்
தளர்வடையாமல் காக்கிறான்

எப்போதும் என் ஆசையின் 
உச்சத்தில் நான் உயிர்த்திருக்கையில் 
அருமருந்தாய் நிரம்புகிறான் என்னுள்

நீர் அருந்துகிறது நிலம்.




* Paintings : Courtesy -Suchi Krishnan

No comments: