Monday 5 May 2014

காலை - பிப்ரவரி 18




வந்துவிடுவான்

சொல்லிக்கொள்ளாமல்
எங்கோ சென்றவன் அவன்
காலம் முழுக்கத் தன்னைக் காப்பவன் அவனென
கைகள் பற்றி பின்வந்த அவள்
தனித்திருக்கிறாள்
இசைவுறாது திரிந்த உடலும்
கலைந்த மனமுமாக பிரிந்து சென்றவன்
வானத்திலும் நிலத்திலும்
முடிவுறா வழிகளில் சென்று
அதே பாதையில் திரும்புவான் எனும் 
நம்பிக்கையில் அவள்

அதே திறந்த சாளரம்
அதே பறவைக் குரல்
அதே பறவை தானா 
கேள்வியாய் காத்திருக்கும்
அவளின் அதிகாலை புலர்கிறது.
%

No comments: