Monday 5 May 2014

இரவு - பிப்ரவரி 21




அந்தி கடந்து இரவுக்குள் நுழைகிறாள்
மெல்லிய நினைவு பரவ

காதலில் ஒருமுறை அழைக்கிறான் அவன்
இவளின் அத்தனைக் கதவுகளும் திறந்து கொள்கின்றன 

பூக்கள் விரிந்திருக்கும் வழியெங்கும்
சிறகசைக்கும் பட்டாம் பூச்சியை உணர்கிறாள்
பூக்களை மலர்த்துவதும்
பட்டாம்பூச்சியின் சிறகினை விரியச் செய்வதும்
ஒரு சொல்லில் நிகழும் அற்புதம்
உணர்த்தியவன் அவன்
அந்தச் சொல்லில் யாவற்றையும் அன்பளிக்க
அவளைத் திறந்து வைத்திருக்கிறாள்.
%

Courtesy : Painting -Jeff Larson

No comments: