Sunday 4 May 2014

இரவு - பிப்ரவரி 11







முந்தைய நாட்களின்
முனை சுருளாத பக்கங்களை  வாசிக்கத் துவங்குகிறாள்.
இருத்தலுக்கும் இன்மைக்கும் இடையே
பறவைக் கனவு கண்ட தினங்களில் எழுதப்பட்டவை.
பழுப்பேறிய காகிதங்களாக
மனதின் அடுக்குகளுக்குள்
பத்திரப்படுத்தபட்டிருப்பவை .
இரகசியச் சொற்களும் குறியீடுகளும் அற்ற
நேரடிச் சொல்லாடலில் குருதி கொப்பளிக்கும்
வாழ்வைப் பொதிந்திருப்பவை .
அந்தச் சொற்களின் வெம்மையில்
கசியும் துளி நீரினை இரவுக்குப் பரிசாக்குகிறாள் .


%

Courtesy Painting -Albertus Joseph

No comments: