Monday 5 May 2014

மார்ச் - காலை 2




உள்ளுக்குள் எதுவுமே நடக்காதது போலவே இருக்கிறேன்
தண்ணீரிலும் ரத்தத்திலும் விளைந்த தன்னுடலிலிருந்து
முதல் முதலாய் பெருகிய ரத்தம் முதல்
நேற்றிரவுக் கனவில் துளிர்த்த ரத்தம் வரையிலும்
முத்தத்தைப்போல
வெதுவெதுப்பாக இருக்கிறது
அது
அதிகாலைக் கனவுகளைக் குலைப்பவனுடைய
சொற்களைவிட மென்மையானது
வலி குறைந்ததும் கூட .
%
Courtesy : Painting-kristina-laurendi

No comments: