Monday 5 May 2014

மார்ச்-இரவு 6





மாலையிளம் வெயில் குரலாக ஒலிக்க 
மன ஆழத்திலிருந்து மகிழ வைக்கும்
இரவினைப் பரிசளித்தான்
சூரியனின் ஒளிர்வை
இந்த இருளிலும் ஏந்துகிறேன்
முதன் முறையாக
திறந்தவெளி உணர்ந்த கணத்தில்
எல்லாம் மறந்து போனேன்
அப்பொழுது
வெறுப்பு அணுகா 
உண்மையைக் கற்றுத் தந்தவன் அவன்
இவ்வாறே நாங்கள்
ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்கிறோம்
தனித்தனியாகத் தொலைவில் இருந்தபோதும் .
%
 Courtesy : Painting- amrita sher gil

No comments: