Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 12




அவளைத் துன்புறுத்திக்கொண்டிருக்கும்
நெருடலான நினைவுகளை 
உதறிவிட இயலாதவளாக இருக்கிறாள் .
அவள் தானறியாது ஏற்கிற
சிறிய மன அலைவுகளின்  இரவு
கலக்கமுற்றுக் கரைகிறது .
அன்பு ஓயாமல் தன்னை வெளிப்படுத்தியவாறு இருக்கிறது
அன்பு ஓயாமல் தன்னை அறிவித்தவாறு  இருக்கிறது
அன்பு ஓயாமல் அலைவுறச்செய்கிறது
அன்பு ஓயாமல் கலக்கமுறச் செய்கிறது
அன்பு அப்படித்தான் இருக்கிறது
அதன் இயல்பை என்ன செய்வாள் அவள் .
%



Courtesy : Painting - Virginie-Caillet

No comments: