Monday 5 May 2014

காலை - பிப்ரவரி 27





ஆழக் கடல்நடுவே
இதழ் மூடிய சிப்பியென
நெடுங்காலம் தனித்திருக்கும்
காதலின் காத்திருப்பில்
அவனை வந்தடையும் கடின வழிகளையும்
இரவுகளின் தனிமையில் நினைத்திருப்பாள்
இதோ
அவளின் அதிகாலையில்
நிலமெல்லாம் நீராய் பரவும்
கருநீல வான இடிமழையை
இதழ் திறந்து ஏற்கிறாள்
ஆவியாகி
மீண்டும் மழையாகிவிடாமல்
ஒற்றைத் துளியை பத்திரப்படுத்துகிறாள்
அவன் பெயர் சொல்லி .
%

No comments: