Monday 5 May 2014

மார்ச்-இரவு 1





நாள் முழுக்க மரம் போலிருந்த அவள்
பூத்தாள்
கனிந்தாள்
கிளைபரப்பி நிமிர்ந்தாள்
பறவைகளுக்கு அடைக்கலம் தந்தாள்
ஆதரவற்ற கிழவிக்கு நிழல் தந்தாள்
பட்டம் விளையாடிய சிறுவனுக்கு
நூலறுந்திடாத காற்று தந்தாள்
தெரு நாய் ஒன்று
ஒன்றுக்கிருக்க பொறுத்திருந்தாள்
சருகென பழுத்தும் உதிர்ந்தாள்
இரவில் பெண்ணாக மட்டுமானாள் .
%

Courtesy : Painting-Beverly Ash Gilbert

No comments: