Monday 5 May 2014

காலை - பிப்ரவரி 22





இது அறுவடைக்  காலம்
உறக்கத்தையும்
வியர்த்த தன் உடலையும்
விதையோடு விதைத்தவள்
அதிகாலையிலேயே வயல்நிலம் கிளம்புகிறாள்
பகலும் இரவும் நிலத்தில்
பயிர்களோடு காய்ந்து
கறுத்து மினுங்குமவள் 
முதல் விளைச்சலைக் கையிலெடுக்கையில்
தன் உடலின் முதல் திறப்பின் வலியும் பரவசமும் அடைந்தாள்.
%
 Courtesy : Painting -Fernando Amorsolo

No comments: