Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 7





எல்லா இரவுகளின் கதவுகளும்
ஒரேவிதமாகத் திறக்கப் படுவதில்லை
இன்றைய இரவு
என்னுடைய பால்யகாலத்துத் தெருக்களைத்
திறந்து வைத்துத்துள்ளது
மஞ்சள் விளக்கு வழிந்தெரியும்
தெருவிலிறங்கி பச்சைக் குதிரை தாண்டியதும்
தட்டங்கல் விளையாடியதும் 
நிலாயிரவில் கிளித்தட்டு விளையாடி
உறக்கம் மறந்ததும் நினைவிலாடுகிறது
பின்னும் சில
நீளம் குறைந்த இரவுகள் மனதிலாட
நீண்ட இரவொன்றில் நுழைகிறேன் .
%

No comments: