Sunday 4 May 2014

இரவு பிப்ரவரி 1



இரவை நதி என்பேன்  

அது என்
மனதைப் பேராவலாய் தழுவிச் செல்கிறது
 குளிரும் வெம்மையுமான நீராடலைத் தருகிறது
 சிற்றலை ஆடும் நள்ளிரவு  
 
சுவாசக்காற்றின்
 
ரகசிய ஒலிக்குறிப்பினை உடல்மேல் படர்த்துகிறது
 
பேரின்பத்தின் உச்சம்
 
வெறுமையின் வாதை
 
ஒருசேர உணர்த்தும் காதல்போல
 
இருக்கிறது என்பதால்
 
இரவை வணங்குகிறேன்.
 Courtesy -painting Di Li feng

No comments: