Monday 5 May 2014

மார்ச்-இரவு 3





காரைக்கால் அம்மைக்கு
நீலகண்டன் மேல் தீராக்காதல்
மந்திரத்தில் மாங்கனி வரவழைக்க
வரம்தந்த அவன்
அவள் தலையால் நடந்தும்
உடல் உதிர்த்தும் காட்சி தரவில்லை
என்று கதையிருக்க
தான் மறக்கையில் லிங்கம் கண்டாள் அவள்
என்று அறிகிறேன்
உடல் உதிர்ந்து விடுமென்று
இதற்குமுன் எனக்கு தெரியாது
இன்று உதிர்ந்தது என் உடல் .
%

No comments: