Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 16




மீன்களற்ற தனி நிலா
என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது
நிலவில் சுடரும் பூக்களின்
நிசப்தவாசனை வெளியெங்கும் பரவுகிறது
தெருவில் தனித்தலையும் நாய்
ஊளையிட்டு ஓய்கிறது
கடிகாரச் சுற்று நிசப்தம் கலைக்கிறது
மூச்சுக் காற்று அலையின் பேரிரைச்சலாக
எழும்பி அமிழ்கிறது
மூடா இமைகள் கனத்து
கண்ணீர் துளிர்க்கிறது
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்
காதல் வயப்பட்ட மனம்
உறங்காமல் தனித்திருப்பதும் .
%


Courtesy : Painting -Bill Mather

No comments: