Monday 5 May 2014

மார்ச் - காலை 3





மூதாதையர்களின்
இழைகளினால் நெய்யப்பட்ட
உடலையே தாங்கி நிற்கிறோம்
ஊடும் பாவுமாக அசைந்தசைந்து
இறுகிக் கெட்டிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
அவ்விழைகளில் சாயங்களை
இரவுக்கு ஒன்றென்றும் 
பகலுக்குப் பலவென்றும்
அழுந்தப் பூசுகிறோம்
காண்போரிடமிருந்து பெறப்படுகிற நிறம்
இன்றைய தினத்தில்
இளவேனிற் காலத்து 
அதிகாலைத் தூறல் தந்திருக்கிறது .
% 
Courtesy : Painting-Toni Carmine Salerno

No comments: