Monday 5 May 2014

மார்ச் - காலை 6




அடிமண்ணில் உள்ளூறிப் பெருகும்
நீரூற்றின் சிறகு நனைத்தலில்
மினுங்கிய பறவைப்பொழுதில்
புராதனப்பனி திரண்டு பொழிகிற
கீழ்வானக் குளிர் கனவையும்
இறகடி இளம் சூட்டினை விரலளைந்து உணர்ந்த
ரகசியக் கனவினையும் 
ஒருசேர உணர்ந்த
அப்படி ஒரு அதிகாலையை
பின்னெந்த நாளிலும் சந்திக்கவில்லை
விரும்பவுமில்லை

வெளிச்சத் துகள் நிலம் வந்தடையும் முன்பாக
இரவின் விளிம்பில் சிறகு விரித்த
முதல் சிறு நீலப் பறவையை உணர்ந்த கணம் அது .
%

Courtesy : Painting- Saswati Chaudhuri

No comments: